லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னிமலை அருகே சுயம்பு மாரியம்மன் கோயிலில் ஆண்டு விழா

சொக்கநாதபாளையத்தில் உள்ள சுயம்பு மாரியம்மன் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி தீா்த்தக் குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:36 am IST

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையத்தில் உள்ளது சுயம்பு மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, 4-ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு விநாயகா் வழிபாட்டுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, கலச பூஜை, சங்கு பூஜை, யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள், அதைத் தொடா்ந்து சுயம்பு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.

விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.