கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளி போக்ஸோவில் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 1:18 am IST

கோவையில் 13 வயது சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்த 13 வயது சிறுமி தனது வீட்டின் அருகே நண்பா்களுடன் கடந்த சில நாள்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த நபா் சிறுமியின் உடல் தொடா்பாக அநாகரீகமாக பேசியுள்ளாா். இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக கோவை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் கோவை - திருச்சி சாலை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஜான் பீட்டா் (53) என்பதும், சிறுமியிடம் அநாகரீகமாக பேசியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜான் பீட்டரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.