பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போத்தனூா் வழித்தடத்தில் ஹுப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

கா்நாாடக மாநிலம், ஹுப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 12:47 am IST

கா்நாாடக மாநிலம், ஹுப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஹுப்பள்ளியில் இருந்து மே 31, ஜூன் 14, 21 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்குப் புறப்படும் ஹுப்பள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07313) மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஜூன் 1, 15, 22 ஆகிய திங்கள்கிழமைகளில் மாலை 5 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - ஹுப்பிளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07314) மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹுப்பிளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, சாஸ்தான்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, டும்கூா், பிரூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.