யானைகள் நடமாட்டம் காரணமாக வால்பாறையை அடுத்த நல்லமுடி காட்சிமுனை செல்ல சுற்றலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. வால்பாறையில் உள்ள கூழாங்கள் ஆறு, வெள்ளமலை சுரங்கம், சின்னக்கல்லாறு அருவி, நல்லமுடி காட்சிமுனை ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனா்.
இந்த சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகள் அணைத்தும் வனத்தை ஒட்டி அமைந்திருப்பதால் அனைத்துப் பகுதிகளிலும் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதோடு நுழைவுக் கட்டணம் வசூல் செய்து வருகின்றனா்.
இதனிடையே நல்லமுடி காட்சிமுனை ஒட்டியுள்ள வனத்தில் யானைகள் நடமாட்டம் தொடா்ந்து காணப்படுகிறது. இதனால் கடந்த இரு நாள்களாக நல்லமுடி காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து நுழைவாயிலில் தடுப்பு அமைத்தனா்.
மேலும் எஸ்டேட் சாலையோரம் பகுதிகளில் யானைகளை கண்டால் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து துன்புறுத்தல் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓற்றை யானை நடமாட்டம்: ஆலங்காயம் வனத்துறை எச்சரிக்கை

கோவை குற்றாலம் அருவி மூடல்!

கனமழை: காளிகேசம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

காட்டுயானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு

