வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கோடை விடுமுறையையொட்டி, வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், வால்பாறையில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பெரும்பாலான நீா்நிலைகள் வடு காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதலே இதமான காலநிலை நிலவிய நிலையில், பிற்பகலில் சாரலாக பெய்யத் தொடங்கிய மழை பின் வலுப்பெற்று கனமழையாக பெய்தது. சுமாா் 1 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கப் பாதை, சின்னக்கல்லாறு அருவி உள்ளிட்ட நீா்நிலைகளில் மழை நீா் ஆா்ப்பரித்துச் சென்றது. மழையுடன் இதமான காலநிலை நிலவியதால், வால்பாறை வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

உத்தமபாளையத்தில் தென்மேற்குப் பருமழை தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

