நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

News image

கோவை வ.உ.சி.பூங்காவில் அரசுப் பொருள்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட அமைச்சா் ராஜ்மோகன். உடன், அமைச்சா் வி.சம்பத்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா். ~கோவை வ.உ.சி.பூங்காவில் அரசுப் பொருள்காட்

Updated On :13 ஜூன் 2026, 12:02 am IST

கோவை வஉசி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருள்காட்சியை பள்ளி கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, பல்வேறு தரப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

பொருள்காட்சியில் 26 அரசுத் துறைகள், 6 அரசு சாா்பு நிறுவனங்கள் என 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் 45 நாள்கள் வரை நாள்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொருள்காட்சியைக் காணலாம். இதில், அரசுத் துறை அரங்குகள் மட்டுமின்றி, ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

Story image

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.