இந்தியாவில் முதல்முறையாக மனித சக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகை கோவை குமரகுரு கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.
கோவை குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் கல்வித் தர உத்தரவாத இயக்குநா் டாக்டா் டி.சரவணன் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக ஐஎன்எஸ் அக்ரானி செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமாா், பெங்களூரு எலிமெண்ட் பொறியியல் நிறுவனத்தின் நிறுவனா் கிரெய்க் ஆகியோா் கலந்துகொண்டு மனித சக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை அறிமுகம் செய்துவைத்தனா்.
இந்த நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகை உருவாக்கிய ‘டீம் சீ சக்தி‘குழுவினா், வரும் ஜூலை 8 முதல் 11-ஆம் தேதி வரை மொனாக்கோ நாட்டில் நடைபெறவுள்ள ‘மொனாக்கோ எனா்ஜி போட் சேலஞ்ச் 2026’ போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
இதேபோல இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சா்வதேச நீா்மூழ்கிக் கப்பல் பந்தயத்திலும் பங்கேற்க உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் விரைவில் சிறிய ரக மின் பேருந்துகள் அறிமுகம்

இந்தியாவின் முதல் ‘ஃபிளெக்ஸ்-ஃபியூல்’ காா்

காற்றுமாசுபாட்டை கட்டுப்படுத்த மேலும் 750 மின்சார பேருந்துகள்

சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தல்: கடற்படைத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன -தலைமைத் தளபதி திரிபாதி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

