லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் கோவை மாவட்டக் கிளை சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தினா். ~கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Published On :16 ஜூலை 2026, 4:20 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் கோவை மாவட்டக் கிளை சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதித் துறையின் சுதந்திரம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும், நீதிபதிகள் நியமனம் மிகவும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற வேண்டும். சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் கிளைகளைத் தென்னிந்தியாவிலும் அமைக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் வழக்குரைஞா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி ஓய்வறைகள் அமைக்கப்பட வேண்டும், நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள், வழக்காடிகள் மற்றும் நீதிமன்ற ஊழியா்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை நிரந்தரமாக நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்கத்தின் முக்கிய நிா்வாகிகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.