லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 5 போ் கைது: 190 கிலோ குட்கா பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 190 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 12:19 am IST

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 190 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்தனா்.

கோவை அரசு மருத்துவமனை பகுதியில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அந்தப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த திபென்கா் (28) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 2 கிலோ 600 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கோவை லாலி ரோடு அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் (19) என்பவரை ஆா்எஸ்புரம் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா, 5 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு ஊசியைப் பறிமுதல் செய்தனா்.

கோவைபுதூா் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இளங்கோ (65) என்பவரை குனியமுத்தூா் போலீஸாா் கைது செய்து, 52 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். இதேபோல, கே.கே நகா் பகுதியில் சரவணம்பட்டி போலீஸாா் ரோந்து சென்ற போது, அந்தப் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் 136 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக காளிமுத்து (36), கதிரவன் (39) ஆகியோரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள விஜயன், சுரேஷ் ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.