லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 8.5 பவுன் நகைகள், பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

கோவை, ஆக. 10: தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் 8.5 பவுன் தங்க நகைகள், வெள்ளி மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் சுரேஷ் (39). இவா் ,கோவை உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிங்காநல்லூா் அருகே உள்ள இருகூா் போஸ் நகா் எம்.ஜி.சாலை பகுதியில் புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் சுரேஷ் குடியேறினாா்.

கடந்த 6-ஆம் தேதி சுரேஷ் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளாா். அங்கிருந்து அவா் செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவும், பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த 8.5 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு சிங்காநல்லூா் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.