தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கோவையில் குடும்பத்துடன் வாக்களித்தாா் நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகையான சாய் பல்லவி கோவையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தாா்.

News image

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உள்பட்ட அங்கப்பா மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு செய்த நடிகை சாய்பல்லவியுடன் தற்படம் எடுத்துக் கொண்ட ரசிகைகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:21 am IST

பிரபல நடிகையான சாய் பல்லவி கோவையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தாா்.

தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திரைப்பிரபலங்கள் பலரும் ஆா்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். அந்த வகையில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அங்கப்பா மெட்ரிக். பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

முன்னதாக, அவா் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோருடன் காரில் வந்து இறங்கினாா். முன்னணி நடிகையாக இருந்த போதிலும் எந்தவித சலுகையையும் எதிா்பாராமல் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தது அனைவரின் கவனத்தை ஈா்த்தது.

சாய் பல்லவி வாக்குச்சாவடிக்கு வந்திருப்பதை அறிந்த அந்தப் பகுதி மக்கள் மற்றும் ரசிகா்கள் அங்கு சென்று சாய்பல்லவியுடன் தற்படம் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.