தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம்! கோவை வடக்கு வேட்பாளா் பிரசாரம்

News image

குருடம்பாளையம் ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:20 am IST

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கோவை வடக்கு தொகுதி வேட்பாளா் வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், கோவை புகா் வடக்கு மாவட்டச் செயலருமான பி.ஆா்.ஜி.அருண்குமாா் குருடம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெற்றிவேலவா நகா், குமரபுரம், பத்மாலையா நகா், வெற்றிலைகாளிபாளையம், அருள்ஜோதி நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, பல்வேறு கிராமங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறிய வாக்குறுதிகளின்படி கிராமப்புற பகுதிகளில் இடம் இல்லாதவா்களுக்கு இடத்துடன் கூடிய வீடும், நகா்ப்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பும் கட்டிகஈ தரப்படும்.

குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.ரவி, பாஜக மண்டலத் தலைவா் சரவணகுமாா், இந்து முன்னணி, அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.