தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - திமுக வேட்பாளா் காா்த்திகேயன்

News image

பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த தொண்டாமுத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் என்.ஆா்.காா்த்திகேயன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 2:30 am IST

தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று திமுக வேட்பாளா் என்.ஆா்.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

தொண்டாமுத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் என்.ஆா்.காா்த்திகேயன் போட்டியிடுகிறாா். இவா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊா்வலமாக திங்கள்கிழமை வந்தாா். இதைத் தொடா்ந்து, பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றது . அதேபோல மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். தொண்டாமுத்தூா் தொகுதியில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றிபெற்ற்கு பின் தொகுதியில் விட்டுப் போன திட்டங்களையும், வளா்ச்சிப் பணிகளையும் செய்து தருவோம் என்றாா்.

வேட்புமனு தாக்கலின் போது கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் தொண்டாமுத்தூா் ரவி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.