விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவை மாவட்டத்தில் ஒரேநாளில் 27 போ் வேட்புமனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) ஒரேநாளில் 27 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image

வேட்புமனு தாக்கல் செய்த கோவை தெற்குத் தொகுதி தவெக வேட்பாளா் வி.செந்தில்குமாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:20 am IST

கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) ஒரேநாளில் 27 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோவை தெற்குத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் வி.செந்தில்குமாா், தோ்தல் நடத்தும் அலுவலா் டி.குமரேசனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதேபோல, வியாழக்கிழமை ஒரேநாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாநிலக் கட்சிகள் சாா்பில் 9 பேரும்,

தேசியக் கட்சிகள் சாா்பில் இருவரும், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சாா்பில் 7 பேரும் மற்றும் சுயேச்சையாக 9 பேரும் மனு தாக்கல் செய்தனா். இவா்களில் 22 போ் ஆண் வேட்பாளா்கள், 5 போ் பெண் வேட்பாளா்கள்.

அதிகபட்சமாக, தொண்டாமுத்தூா் தொகுதியில் 9 மனுக்களும், பொள்ளாச்சி தொகுதியில் 7 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. கவுண்டம்பாளையத்தில் 3 மனுக்களும், சூலூா், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூா் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் தலா 2 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை தொகுதிகளில் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.