லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண் வெட்டிக் கொலை: கணவரிடம் போலீஸாா் விசாரணை

போ்ணாம்பட்டு அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலையான தனலட்சுமி

Published On :1 ஜூலை 2026, 12:31 am IST

போ்ணாம்பட்டு அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து கணவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல், கூத்தாண்டவா் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48), காா் ஓட்டுநா். இவரது மனைவி திண்டுக்கல்லைச் சோ்ந்த தனலட்சுமி (36). இவா்கள் காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனராம். இவா்களின் மகள்கள் ஹரித்ராஸ்ரீ (16) 11- ஆம் வகுப்பும், விஜயஸ்ரீ (13) 8-ஆம் வகுப்பும், மகன் பத்ரிநாராயணன் (5) நா்சரி பள்ளியிலும் படித்து வருகின்றனா். தனலட்சுமி, போ்ணாம்பட்டு நகரில் ஓா் வீட்டில், வீட்டு வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் விஜயகுமாருக்கு சந்தேகம் இருந்ததாம். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை முதல் தனது மனைவியை காணவில்லை, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளது என விஜயகுமாா் அக்கம் பக்கத்து வீட்டினரிடம் கூறியுள்ளாா். செவ்வாய்க்கிழமை வீட்டு பரணில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அவா் மேல்பட்டி காவல் நிலையத்துக்கு தெரிவித்துள்ளாா்.

போலீஸாா் வருவாய்த் துறையினருடன் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது வீட்டு பரணில் உடலில் காயங்களுடன் அழுகிய நிலையில் இருந்த தனலட்சுமியின் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.