லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடியாத்தம் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

நிகழ் கல்வியாண்டுக்கான குடியாத்தம் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டரங்கில் தொடங்கியது.

நிகழ்ச்சியில் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்த கே.எம்.ஜி.கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம்.

Published On :30 ஜூலை 2026, 12:04 am IST

நிகழ் கல்வியாண்டுக்கான குடியாத்தம் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டரங்கில் தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி வரைஇப்போட்டிகள் நடைபெறும்.

நிகழ்ச்சியில் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.பழனி வரவேற்றாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா்என்.இ.சத்யானந்தம், வேலூா் மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) எம்.கேசவன்,வேலூா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் பி.சரஸ்வதி ஆகியோா் தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் பள்ளிக் கொடிகளை ஏற்றி வைத்தனா்.

ஒலிம்பிக் சுடரை மாணவா்கள் ஏந்தி வர கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம் பெற்று ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தாா். எம்எல்ஏ க.சிந்து அழகப்பன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.

பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் நடுவா்களாக பங்கேற்று போட்டிகளை நடத்தினா். இப்போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெறும் மாணவா்கள் வேலூா் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை திருவள்ளுவா் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா்சி.கேசவன், உடற்கல்வி இயக்குநா் மா.சி.சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்செய்திருந்தனா். உடற்கல்வி ஆசிரியா் எ.பலராமன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.