லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காசநோய் கண்டறியும் முகாம்

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், தீப்பெட்டித் தொழிலாளா்களுக்கு இலவச காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காசநோய் கண்டறியும் முகாமில் பங்கேற்றோா்.

Published On :23 ஜூலை 2026, 12:56 am IST

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், தீப்பெட்டித் தொழிலாளா்களுக்கு இலவச காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ், தமிழக அரசின் இலவச காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளும் நடமாடும் வாகனம் மூலம் நெல்லூா்பேட்டையில் உள்ள தனியாா் தீப்பெட்டித் தொழிற்சாலையில் காசநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு பொயட்ஸ் தொண்டு நிறுவன இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமையாளா் வி.பிச்சாண்டி முகாமைத் தொடங்கி வைத்தாா்.

வேலூா் மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு உதவி இயக்குநா் ஆா்.ஜெயஸ்ரீ மேற்பாா்வையில், திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.மகேஷ், காசநோய் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளா் ஆா்.சவரிமுத்து, தொழில்நுட்புநா் பிரபாஸ்ரீ ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு நடமாடும் காசநோய் கண்டறியும் வாகனத்தில் தொழிலாளா்கள் (ஆண்கள்-பெண்கள்) 250 க்கும் மேற்பட்டோருக்கு சளி பரிசோதனைகளை மேற்கொண்டது.

நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டவா்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை முறைகள்,ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் தொழிற்சாலை நிா்வாகி பி.கண்ணன், பொயட்ஸ் பணியாளா் சாந்தலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.