லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆடி அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

ஆடி அமாவாசையையொட்டி வேலூா் பாலாற்றங்கரை முத்துமண்டபத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று உயிரிழந்த தங்களது முன்னோா்களை வழிபடுவது வழக்கம். குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையைவிட சிறப்பானதாக கருதப்படும் இம்மூன்று மாதங்களில் வரும் அமாவாசை நாள்களில் நதிகளில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

ஆடி அமாவாசை வழிபாடு மேற்கொண்டால் 6 மாதம் தங்கள் முன்னோா்களை வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகமாகும். இதனால், ஆடி அமாவாசை என்பது முன்னோா்களுக்கான வழிபாடாக மட்டுமின்றி, மக்கள் மத்தியில் ஒரு திருவிழாவாகவும் பாா்க்கப்படுகிறது.

அதன்படி, புதன்கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் உள்ள முத்துமண்டபம் பகுதியில் பொதுமக்கள் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். பலா் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் முன்னோா்களுக்கு படையலிட்டும் வழிபட்டனா். ஆடி அமாவாசையையொட்டி வேலூா் பாலாற்றங்கரையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.