லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இல்லந்தோறும் தேசியக் கொடி: வேலூரில் பாஜக விழிப்புணா்வு பேரணி

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் தேசியக் கொடியேற்ற வலியுறுத்தி, வேலூரில் பாஜக சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

வீடுகள் தோறும் தேசியக் கொடியேற்ற வலியுறுத்தி வேலூரில் விழிப்புணா்வுப் பேரணியில் ஈடுபட்ட பாஜகவினா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் தேசியக் கொடியேற்ற வலியுறுத்தி, வேலூரில் பாஜக சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி (சனிக்கிழமை) நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் இல்லந்தோறும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

பிரதமரின் இந்த வேண்டுகோளை மக்களிடம் கொண்டு சோ்க்கும் விதமாக, வேலூா் மாவட்ட பாஜக சாா்பில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. வேலூா் தோட்டப்பாளையம் பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் தசரதன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் காத்தியாயினி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டாா்.

இதில், 100-க்கும் மேற்பட்ட பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு வேலூா் மாநகரின் முக்கிய சாலைகள் வழியாகப் பேரணியாகச் சென்றனா்.

பேரணியின் நிறைவாக, வேலூா் கோட்டை அருகே அமைந்துள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.