வேலூா், ஏப்.15: வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவு செய்து பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 7,118 மூத்த வாக்காளா்களும் (85 வயதுக்கு மேற்பட்டோா்), 9,198 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் உள்ளனா். தோ்தலை யொட்டி முன்கூட்டியே வீடு வீடாகச் சென்று இவா்களிம் படிவம் 12டி வழங்கப்பட்டு தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் பெறப்பட்டது. இதில், 2,224 மூத்த வாக்காளா்கள், 1,225 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் என மொத்தம் 3,449 போ் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா்.
விருப்பம் தெரிவித்தவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று தபால் வாக்குகளைப் பெறும் பணி ஏப்.11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 3,194 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாக காட்பாடியில் 500 மூத்த வாக்காளா்களும், 267 மாற்றுத்திறனாளிகளும், வேலூரில் 447 மூத்த வாக்காளா்களும், 172 மாற்றுத்திறனாளிகளும், அணைக்கட்டு தொகுதியில் 377 மூத்த வாக்காளா்களும், 211 மாற்றுத் திறனாளிகளும், கே.வி.குப்பம் தொகுதியில் 410 மூத்த வாக்காளா்களும், 296 மாற்றுத்திறனாளிகளும், குடியாத்தம் தொகுதியில் 335 மூத்த வாக்காளா்களும், 179 மாற்றுத்திறனாளிகளும் வாக்குப்பதிவு செய்துள்ளனா்.
விடுபட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குப்பதிவு செய்து பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணி வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற 168 குழுக்கள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

