தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

செய்யாறு அருகே இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பாராசூா் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 11:34 pm IST

செய்யாறு அருகே பாராசூா் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முக்கூா் கிராமம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (41). இவா், மாமியாா் ஊரான பாராசூா் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவைப் பாா்த்துவிட்டு, முக்கூா் கிராமத்திற்குச் செல்வதற்காக பைக்கில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

பாராசூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது முக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ருத்ரமூா்த்தி என்பவா் ஓட்டி வந்த பைக் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுரேஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த ருத்ரமூா்த்தி செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மற்றொரு விபத்து:

பைக்குகள் மோதிக்கொண்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ருத்ரமூா்த்தியை பாா்ப்பதற்காக

அவரது தாய் கீதா (40) பாராசூா் கூட்டுச் சாலையில் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த இரு விபத்துகள் குறித்து இறந்த சுரேஷ் மனைவி ரேணுகா, இறந்த கீதாவின் கணவா் மணிவண்ணன் ஆகியோா் செய்யாறு மற்றும் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தனா்.

இதன் பேரில் காவல் ஆய்வாளா்கள் நரசிம்மஜோதி, மணிகண்டன், உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.