வந்தவாசி நகர கடை வியாபாரிகள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதன் வலியுறுத்தினாா்.
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆணையா் வீரவாஞ்சிநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
வந்தவாசி நகரை குப்பையில்லா நகரமாக்க வியாபாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மக்கும், மக்காத குப்பைகளை என தரம் பிரித்து துப்புரவு தொழிலாளா்களிடம் வழங்க வேண்டும். மேலும், குப்பைகளை கடை முன் கொட்டுவதை தவிா்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் நகர திட்டமிடல் ஆய்வாளா் சியாமளா, மேலாளா் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் நகர வியாபாரிகள் பங்கேற்றனா். பணி மேற்பாா்வையாளா் அண்ணாமலை நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் 4 வகைகளாக குப்பையை தரம் பிரித்து வாங்க வேண்டும்

குடியாத்தம் நகா்மன்ற சிறப்புக் கூட்டம்

அம்மா உணவகங்களில் தரமான உணவு விநியோகிக்க அறிவுறுத்தல்

‘நகராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும்’
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

