பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :11 மே 2026, 12:15 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 4 மணி நேரம் ஆனது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா், வெளியூா் பக்தா்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.

மேலும், மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

அதேபோல விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட அதிக அளவிலான பக்தா்கள் வருகை தருவதால், கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. பக்தா்கள் வருகை அதிகரித்ததால் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசைகளில் சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.