விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், வந்தவாசி, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள்

News image

வந்தவாசி எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த தோ்தல் ஊழியா்கள்.

Updated On :17 மார்ச் 2026, 3:23 am IST

வந்தவாசி/ஆரணி: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், வந்தவாசி, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஆரணி சாலையில் உள்ள பயணியா் விடுதி எதிரில் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தை தோ்தல் ஊழியா்கள் திங்கள்கிழமை காலை பூட்டி சீல் வைத்தனா்.

வந்தவாசி வருவாய் ஆய்வாளா் விஜயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் அா்ஜூனன் உள்ளிட்டோா் எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா்.

மேலும் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள காமராஜா் சிலை, பிராமணா் தெரு- யாதவா் தெரு சந்திப்பில் உள்ள கருணாநிதி சிலை, ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலை ஆகியவை துணியால் மூடப்பட்டன.

ஆரணி

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். அப்போது, மண்டல துணை வட்டாட்சியா் குமரேசன், உதவிப் பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, ஆரணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி அறைக்கும் சீல் வைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.