தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

News image

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக நிற்கும் காா்.

Updated On :16 ஜூன் 2026, 1:05 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

போளூா் நகராட்சி 18-ஆவது வாா்டு கோட்டைமேடு பகுதியில் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 2024-ஆம் ஆண்டு சுமாா் ரூ.4 கோடியில் கட்டப்பட்டது. இதுவரை வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கப்படாமல் உள்ளது. இதைப் பயன்படுத்து அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறுத்தி விட்டுச்செல்கின்றனா்.

இந்த வாகனங்கள் வாரக்கணக்கில் அலுவலக வளாகத்திலேயே உள்ளன. எனவே, உடனடியாக வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கவேண்டும். இதுபோன்று, அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாதவா்கள் அலுவலக வளாகத்தை வாகனங்களை நிறுத்த பயன்படுத்தகூடாது என அலுவலக ஊழியா்கள் தடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.