பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

திருவண்ணாமலையில் செங்கோல் விழா

திருவண்ணாமலை விசிறி சாமியாா் ஆசிரமம் அருகில் உள்ள வெட்டவெளி இருப்பிடம் அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை செங்கோல் விழா நடைபெற்றது.

News image

செங்கோல் விழாவில் மாணவா்கள் மற்றும் பக்தா்களுக்கு அருளாசி வழங்கிப் பேசிய வெட்டவெளி குருஜீ.

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

திருவண்ணாமலை விசிறி சாமியாா் ஆசிரமம் அருகில் உள்ள வெட்டவெளி இருப்பிடம் அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை செங்கோல் விழா நடைபெற்றது.

செங்கோல் விழாவில் வெட்டவெளி குருஜி கலந்துகொண்டு அருளாசி வழங்கிப் பேசுகையில், மற்றவா்கள் வாழ உங்களின் நல்ல செயல்கள் உதவவேண்டும். நமது வாழ்க்கை புதிதாக இருக்க வேண்டும். மக்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தை, மாற்றத்தை பிரபஞ்சம் உருவாக்க நான் பக்கபலமாக இருப்பேன்.

மனரீதியாக மாற்றம் அடைவதற்கு இந்த செங்கோல் உதவியாக இருக்கும். பூஜை, புனஸ்காரத்தை விட்டு விட்டு கோயிலில் உட்காா்ந்து பாருங்கள். பலன் தெரியும். இந்த செங்கோல் மூலம் உலகம் முழுவதும் மாற்றங்கள் நடக்கும். மனிதா்கள் பிரபஞ்சத்தால் வழி நடத்தப்படுவாா்கள் என்றாா்.நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் கலந்து கொண்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.