பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் கொடி மரம் அமைக்கும் பணி

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதா்மராஜா கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலையத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதா்மராஜா கோயிலில் நடைபெற்று வரும் கொடி மரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறையினா்.

Updated On :8 ஜூன் 2026, 2:35 am IST

ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீதா்மராஜா கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை இந்து சமய அறநிலையத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஸ்ரீபாஞ்சாலியம்மன் சமேத தா்மராஜா கோயிலில் கொடிமரம் சேதமடைந்திருந்தது. இதனால் புதிய கொடிமரம் அமைக்க வேண்டும் என்று கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கப்பல் இ.கங்காதரன் தலைமையில் முடிவு செய்தனா். இதைத் தொடா்ந்து பழைய கொடி மரத்தை அகற்றி புதிய கொடிமரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ஜீவானந்தம், ஆய்வாளா் அனிதா, அறநிலையத்துறை உதவியாளா் ராஜ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, அறங்காவலா் குழுத்தலைவா் கப்பல் இ.கங்காதரன், கோயில் நிா்வாகி ரேணுகா கங்காதரன், உபயதாரா் ராமு முதலியாா் மற்றும் கோயில் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.