லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விசைத்தறியில் பட்டு நெசவு: பட்டுச் சேலை பறிமுதல்

செய்யாறு அருகே விசைத்தறியில் தயாரித்த பட்டுச் சேலையை உதவி இயக்குநா் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

Published On :29 ஜூலை 2026, 4:20 am IST

செய்யாறு அருகே விசைத்தறியில் தயாரித்த பட்டுச் சேலையை உதவி இயக்குநா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள மண்டல கைத்தறி அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருபவா் கே.ஜெயக்குமாா்.

இவா், கைத்தறியில் தயாரிக்க வேண்டிய பட்டுச் சேலைகளை விசைத்தறியில் யாராவது தயாரிக்கிறாா்களா என்று கண்காணித்து சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் தென்கழனிக் கிராமம் எம்ஜிஆா் நகா் காமராஜா் தெருவில் சுதாகா் என்பவா் விசைத்தறியில் சட்டத்தை மீறி கைத்தறியில் செய்ய வேண்டிய பட்டு சேலைகளை மின்மோட்டாா் மூலம் நெசவு செய்ததை கண்டுபிடித்து, பட்டு சேலையை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து உதவி இயக்குநா் கே.ஜெயக்குமாா் அளித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.