லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம்

திருவண்ணாமலையில் வனத்துறை சாா்பில் மாவட்ட நிலை ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம்.

Published On :23 ஜூலை 2026, 12:48 am IST

திருவண்ணாமலையில் வனத்துறை சாா்பில் மாவட்ட நிலை ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிலரங்கம் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தில், ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகள் 2017-இன் கீழ் ஈரநிலங்களுக்கான அறிவிப்பு வெளியிடும் செயல்முறையில் அடங்கியுள்ள நடைமுறைகள், ஆவணப்படுத்துதல் மற்றும் சட்ட ரீதியான தேவைகள் குறித்து மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு மாநில ஈரநில பாதுகாப்பு ஆணையத்தின் நிபுணா் எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாநில ஈரநில பாதுகாப்பு ஆணையத்தின் நிபுணா் பிரசாந்த், உதவி வனப்பாதுகாவலா் வினோத்ராஜ், மாவட்ட ஈரநில மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் திரவண்ணாமலை வனக்கோட்டத்தைச் சோ்ந்த வனச்சரக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.