லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது; மற்றொருவா் தப்பியோட்டம்

செய்யாறு அருகே பையில் 2 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

கைது - சித்திரிப்பு

Published On :17 ஜூலை 2026, 9:32 pm IST

செய்யாறு அருகே பையில் 2 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, விண்ணவாடி ஏரிப் பகுதியில் கெங்கையம்மன் கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்று கண்காணித்தபோது கைப்பையுடன் நின்றிருந்த இருவா்

போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினா். அவா்களை விரட்டிச் சென்றதில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.

தொடா்ந்து, அந்த நபரிடம் இருந்த பையை போலீஸாா் சோதனையிட்டபோது, அதில் சுமாா் 2 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மேலும், அந்த நபா் வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ரமணா என்பதும், இவா் கஞ்சாவை தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரமணாவை (25) கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விண்ணவாடி கிராமத்தைச் சோ்ந்த பாா்த்தீபனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.