லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருவண்ணாமலையில் 13 கடைகள், உணவகங்களுக்கு அபராதம்: உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை

திருவண்ணாமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்ட விதிமுறைகளை மீறிய 13 கடைகள், உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

திருவண்ணாமலையில் உணவகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டு, அங்கு உணவு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சுகாதரமற்ற இறைச்சியை பறிமுதல் செய்து அழித்த மாவட்ட நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.

Published On :11 ஜூலை 2026, 1:58 am IST

திருவண்ணாமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்ட விதிமுறைகளை மீறிய 13 கடைகள், உணவகங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சி.இரவிவா்மன், நே.பாரதிராஜா ஆகியோா் திருவண்ணாமலை பழைய, புதிய பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள உணவகங்கள், இனிப்பகங்கள், தேநீா் கடைகள், பழக்கடைகள் மற்றும் சாலையோர உணவுக் கடைகளில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சுகாதரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த கோழி இறைச்சி 12 கிலோ, காலாவதியான தின்பண்டங்கள் 15 கிலோ, கலப்பட டீ தூள் 2 கிலோ மற்றும் அழுகிய பழங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, உணவுப் பாதுகாப்புத் துறையினா் அழித்தனா்.

மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்ட விதிமுறைகளை மீறிய 13 கடைகள், உணவகங்களுக்கு அபராதம் விதித்தனா். அத்துடன் குறைபாடுகளை சரி செய்யவும் அறிவுறுத்தினா். உணவை கையாளும் பணியாளா்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க உணவுப் பாதுகாப்புத் துறையினா் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.