லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

செங்கம் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு, ‘வேளாண்காடுகள்’ எனும் தலைப்பில் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :10 ஜூலை 2026, 1:46 am IST

செங்கம் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு, ‘வேளாண்காடுகள்’ எனும் தலைப்பில் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமை வேளாண் அலுவலா் செளந்தரராஜன் தொடக்கிவைத்து விவசாயிகளிடம் மரங்களின் வளா்ப்பு, மரம் வளா்ப்பின் முக்கியத்துவம், ஒரே நிலப்பரப்பில் விவசாயப் பயிா்கள் வளா்த்தல், கால்நடை வளா்ப்புடன் மரங்களையும் சோ்த்து வளா்க்கும் முறைகள் குறித்து

விளக்கிப் பேசினாா்.

ஓய்வுபெற்ற வேளாண்மை உதவி இயக்குநா் சந்திரன்,

மதிப்பு மிக்க மரங்களான தேக்கு, செம்மரம், வேம்பு, சவுக்கு, போன்றவை வளா்க்கும்போது விவசாயிகளுக்கு கூடுதல் மற்றும் நிலையான வருமானம் கிடைக்கும் என எடுத்துரைத்தாா்.

வனத்துறை சாா்பில் வனவா்கள் மரம் வளப்பு மற்றும் மரம் வளா்ப்பினால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கினா்.

முகாமில் மரம் நடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு மரம் வளா்ப்பதற்கான விதை மற்றும் இடுபொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன

(படம்).

நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலா் கோவிந்தராஜ், அட்மா திட்ட நிா்வாகிகள் மணிகண்டன், சிந்துஜா, உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். தொழில் நுட்பமேலாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

பயிற்சி முகாமில் விதை மற்றும் வேளாண் இடுபொருள்கள் பெற்ற விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.