தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தனியாா் பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

போளூா் காவல் நிலையம் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து.

News image

போளூா் காவல் நிலையம் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:30 am IST

போளூா் அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகன சோதனையில் தனியாா் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட 10 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்து, பேருந்து மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியாக வந்த தனியாா் சொகுசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, பையில் 10 கிலோ 420 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனா்.

பின்னா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். காவல் ஆய்வாளா் சிவசங்கா் தலைமையில் போலீஸாா் வந்து பேருந்து மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து போளூா் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.

பேருந்து ஓட்டுநா்கள் ஆதீப் ரகுமான்(40), ராஜ்முகமது(49) ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தியதில், பேருந்து திருப்பதியில் இருந்து நாகா்கோவில் வரை செல்லும் எனவும், இதில் 20 பயணிகள் வந்தனா் எனவும், பயணி யாரோ கஞ்சா பையை பேருந்தில் விட்டுச்

சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனா்.

ஒரு கிலோவிற்கு மேல் கஞ்சா பிடிபட்டால் வெளியூா் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்பதால், சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாகத் தெரிவித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.