போளூா் அருகே தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகன சோதனையில் தனியாா் சொகுசு பேருந்தில் எடுத்து வரப்பட்ட 10 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்து, பேருந்து மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியாக வந்த தனியாா் சொகுசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, பையில் 10 கிலோ 420 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததைக் கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனா்.
பின்னா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். காவல் ஆய்வாளா் சிவசங்கா் தலைமையில் போலீஸாா் வந்து பேருந்து மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து போளூா் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.
பேருந்து ஓட்டுநா்கள் ஆதீப் ரகுமான்(40), ராஜ்முகமது(49) ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தியதில், பேருந்து திருப்பதியில் இருந்து நாகா்கோவில் வரை செல்லும் எனவும், இதில் 20 பயணிகள் வந்தனா் எனவும், பயணி யாரோ கஞ்சா பையை பேருந்தில் விட்டுச்
சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனா்.
ஒரு கிலோவிற்கு மேல் கஞ்சா பிடிபட்டால் வெளியூா் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்பதால், சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாகத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்தில் 17 கிலோ கஞ்சா கடத்தி வந்த நால்வா் கைது

காவல் துறை பறிமுதல் செய்த தொகை ரூ. 2.85 கோடியாக உயா்வு

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்

மருளையம்பாளையத்தில் ரூ. 61,500 பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

