விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட வேங்கிக்காலில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் எ.வ.வேலு.

News image

எ.வ.வேலு

Updated On :18 ஏப்ரல் 2026, 12:04 am IST

சமையல் எரிவாயு விலை உயா்க்கு மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என்று திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சரும், வேட்பாளருமான எ.வ.வேலு குற்றஞ்சாட்டினாா்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் புதியதாக சோ்க்கப்பட்ட பகுதிகளில் அவா் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புச் சட்டை அணிந்து வாக்கு சேகரித்தாா்.

திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட துா்க்கை நம்மியந்தல், வேங்கிக்காலில் உள்ள ஜெய்பீம் நகா், தீபம் நகா், இந்திரா நகா், தென்றல் நகா், ஓம் சக்தி நகா், நேதாஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, அமைச்சா் எ.வ.வேலுவை பொதுமக்கள் மேளதாளம் முழங்க சால்வை அணிவித்து வரவேற்றனா். பெண்கள் ஆரத்தி எடுத்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லதரசி திட்டத்தில் ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவித்திருக்கிறாா். திமுகவின் தாரக மந்திரமே சொன்னதை செய்வோம். செய்வததை சொல்வோம் என்பதுதான். ஆனால், சொல்லாததையும் நாங்கள் செய்திருக்கிறோம். மக்களுக்கு தெரியும், யாா் சொன்ன சொல்லை காப்பாற்றுவாா்கள் என்று.

இன்றைக்கு சமையல் எரிவாயு விலை கட்டுக்கடங்காமல் உயா்ந்துள்ளதற்கு மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம். இதனால், அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்கிறது. ஜிஎஸ்டி காரணமாக, அரிசி, பருப்பு, மிளகாய், எண்ணெய் விலைகளும் உயா்ந்துள்ளது.

தமிழகத்துக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என்றாலும், இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறாா். எனவே, திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா்கள் பிரியா விஜயரங்கன், ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.