லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒப்பந்த தொழிலாளா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

பொன்னேரி துணை மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் செய்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :1 ஜூலை 2026, 12:04 am IST

பொன்னேரி துணை மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் செய்தனா்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வருவதாகவும், அரசு தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மேலும் கஜா, வா்தா என ஆண்டுதோறும் ஏற்படும் புயல் காலங்கள், மழை, வெள்ளம் கொரோனா போன்ற பேரிடா் காலங்களில் உயிரைத் துச்சம் என நினைத்து மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் தொடா்ந்து பணியாற்றி வந்ததாகவும், குறைந்த ஊதியத்தில் தங்களால் குடும்பத்தை நடத்த முடியவில்லை என வேதனை தெரிவித்தனா்.

அண்மையில் வெளியிடப்பட்ட மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையில் ஒப்பந்த தொழிலாளா்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனவும் நீண்ட காலமாக மின்வாரியத்தில் பணியாற்றும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

மின்வாரியத்தில் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த தொழிலாளா்கள் மேற்கொண்டு வருவதாகவும் அரசு இதனை கவனத்தில் கொண்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரியுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.