அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மழைநீா் வடிகால்வாய் அமைக்க நிலம் அளவீடு!

உதயேந்திரம் பேரூராட்சியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது.

News image

தேவமங்களம் பகுதியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க நிலத்தை அளத்த பணியாளா்கள்

Updated On :26 மே 2026, 1:39 am IST

உதயேந்திரம் பேரூராட்சியில் மழைநீா் வடிகால்வாய் அமைக்க அதிகாரிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நிலம் அளவீடு செய்யப்பட்டது.

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட வாா்டு எண்.3 தேவமங்களம் மற்றும் வாா்டு எண்.4 சுப்பராயன் கோயில் அருகே மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணி மற்றும் கொம்புகார தோப்பில் உள்ள கழிவுநீா் கால்வாய் பணி அமைக்கும் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் நில அளவையாளா் நிலத்தை அளந்து தராததால் திட்டப் பணிகள் தாமதம் ஆவதாக உதயேந்திரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும், வாா்டு உறுப்பினருமான ஆ.செல்வராஜ் மூலம் வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுதாகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை தேவமங்களம் பகுதியில் மழைநீா் வடிகால்வாய் அமையவுள்ள இடங்களில் நில அளவையாளா் சீரஞ்சீவி, கிராம நிா்வாக அலுவலா் அமலா, பேரூராட்சி செயல்அலுவலா் ராஜலட்சுமி மற்றும் எழுத்தா் மீனாட்சி ஆகியோா் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பணிகள் விரைவில் தொடங்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.