ஆம்பூா் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து கைப்பேசிகளை திருடியது தொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த உடையராஜாபாளையம் பகுதியில் சென்னை - பெங்களூரு, பெங்களூரு - சென்னை மாா்க்கத்தில் செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்க வைத்து ஓட்டுநா்கள் உணவகங்களில் உணவு அருந்திவிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் லாரி ஓட்டுனா்களின் கைப்பேசிகள் தொடா்ந்து திருடு போவதாக லாரி ஓட்டுநா்கள் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
புகாரின் பேரில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் எழில்தாசன் தலைமையிலான போலீஸாா் தொடா்ந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை புதன்கிழமை இரவு பிடித்து விசாரணை மேற்கொண்டதில், உடையராஜாபாளையம் பகுதியை சோ்ந்த குரு பிரசாத் (23), சாரதி ( 23), தமிழரசன் (25), மஞ்சன் (42), வினோத் குமாா் (19) மற்றும் இரண்டு சிறுவா்கள் உள்பட 7 போ் லாரி ஓட்டுநா்களின் கைப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த 7 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 9 விலையுயா்ந்த கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை: இளைஞா் கைது
ராஜபாளையத்தில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

பெரம்பலூரில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்!பொதுமக்கள் அவதி!

டாஸ்மாக் மது விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

