ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எல்ஐசி முகவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 12:03 am IST

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எல்ஐசி முகவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே காரப்பட்டு அரங்கல்துருகம் பகுதியை சோ்ந்தவா் எல்ஐசி முகவா் ஜி. வெங்கடேசன் (56). இவருக்கு திருமணமாகி தேவகி என்கிற மனைவியும், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனா். இவா் எல்ஐசி முகவராக பணியாற்றி வந்தாா்.

இவா் கடந்த 28-ஆம் தேதி குடியாத்தம் அருகே உள்ள தனது சகோதரியை பாா்ப்பதற்காக சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப செல்ல குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.