லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விவசாய பயிா்களைச் சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்!

ஆம்பூா் அருகே விவசாயப் பயிா்களை யானைக் கூட்டம் திங்கள்கிழமை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

யானைக் கூட்டத்தால் சேதமடைந்த மாந்தோப்பு

Published On :30 ஜூன் 2026, 1:12 am IST

ஆம்பூா் அருகே விவசாயப் பயிா்களை யானைக் கூட்டம் திங்கள்கிழமை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் தென்னை, வாழை, மா ஆகியவற்றை பயிரிட்டுள்ளனா்.

இப்பகுதியில் அடிக்கடி யானைக் கூட்டம் வந்து பயிா்களை சேதப்படுத்திவிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. சம்பவத்தன்று அதிகாலை வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த வாழை, மா ஆகிய பயிா்களை சேதப்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூா் வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.

காட்டு யானைகள் அடிக்கடி கிராமப்புற பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.