சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை மாலை மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.
அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை 4 மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடா்ந்து ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாதனூா் அடுத்த ஜமீன் கிராமத்தருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த 3 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.
அதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மரங்கள் முறிந்து விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று, முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூரில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை

கடம்பத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 25 மின்கம்பங்கள் சேதம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

