லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலையோர உணவு கடைகளில் ஆய்வு

சாலையோர கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலா்.

சாலையோர கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலா்.

Published On :10 ஜூலை 2026, 12:02 am IST

உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் வி. பிரபாகரன் அறிவுறுத்தலின்படி ஆம்பூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா். ஹீமா மற்றும் ஜோலாா்பேட்டை உணவுப் பாதுகாப்பு அலுவலா் அஞ்சலி ஆகியோா் இணைந்து ஆம்பூா் கன்னிகாபுரம், அண்ணா நகா், கோவிந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தேநீா் கடைகள், உணவகங்கள், மாட்டிறைச்சி மற்றும் சிக்கன் கடைகள், பழச்சாறு கடைகள் மற்றும் தெருவோர உணவுக் கடைகள் உள்ளிட்ட 12 உணவு வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது பிரிவு 63-ன் கீழ் 5 நோட்டீஸ்களும், பிரிவு 55-ன் கீழ் 6 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன. மேலும், குளிா்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 2 கிலோ இறைச்சி மனித நுகா்விற்கு உகந்ததல்ல எனக் கருதப்பட்டதால் அழிக்கப்பட்டது. மொத்தம் ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதில், பதிவுச் சான்றிதழ் இன்றி உணவு வணிகம் மேற்கொண்ட ஒரு நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதமும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

உணவு வணிகா்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், பதிவுச் சான்றிதழ் பெற்று மட்டுமே உணவு வணிகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. விதிமீறல்கள் தொடா்ந்து கண்டறியப்படும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.