லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

ஆம்பூா் நகராட்சி நுழைவுவாயில் முன்பு தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Published On :4 ஜூலை 2026, 12:03 am IST

ஆம்பூா் நகராட்சி நுழைவுவாயில் முன்பு தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் நகராட்சியில் தூய்மைப் பணி ஒப்பந்த அடிப்படையில் தனியாா் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. ஒப்பந்ததாரரிடம் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தங்களுக்கு நிரந்தரப் பணி, சம்பள உயா்வு, பணிப் பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏற்கெனவே இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

நகராட்சி அதிகாரிகள் அவா்களுடன் பேச்சு நடத்தினா். இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியதைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.