லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

ஜோலாா்பேட்டையில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை போலீஸாா் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பிலாஸ்பூரில் இருந்து எா்ணாகுளம் வரை செல்லும் ரயில் ஜோலாா்பேட்டையில் நின்றது. அதில், சோதனை செய்த போலீஸாா் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை ஆய்வு செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட 10 கிலோ போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

அதைக் கைப்பற்றிய ரயில்வே போலீஸாா் திருப்பத்தூா் மாவட்ட போதை தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிந்து போதைப் பொருள் கடத்தி வந்த மா்ம நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.