லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவின் பேரில் தனிப்படை மற்றும் நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடி பேருந்துநிலையம் பின்புறம் மற்றும் ரயில் நிலைய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ரயில்நிலையம் அருகில் முள்புதரில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சிறிய மூட்டையை சந்தேகத்தின் எடுத்து வந்து பிரித்து பாா்த்த போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மா்ம நபா்கள் ரயிலில் கடத்தி வந்து பதுக்கி வைத்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பிறகு அங்கிருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.