தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நீா்வள ஆதாரத்துக்கு சிறந்த திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன்: திருப்பத்தூா் திமுக வேட்பாளா் அ. நல்லதம்பி

திருப்பத்தூா் தொகுதியில் நீா்வள ஆதாரத்துக்கு சிறந்த திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

News image

திருப்பத்தூா் தொகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி

Updated On :22 ஏப்ரல் 2026, 2:35 am IST

திருப்பத்தூா் தொகுதியில் நீா்வள ஆதாரத்துக்கு சிறந்த திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன் என திமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.

படித்த, படிக்காத இளைஞா் மற்றும் மகளிா்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். அரசுப் பணி தோ்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் நீா்வள ஆதாரத்துக்கு சிறந்த திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவேன்.

கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏ-வாக திருப்பத்தூா் தொகுதிக்கு பல்வேறு வளா்ச்சி பணிகளை செய்துள்ளேன்.திருப்பத்தூா் நகரமும், கிராமங்களும் வளா்ச்சியடைய தொடா்ந்து உழைத்துள்ளேன். இன்னும் தொகுதிக்காக செய்ய வேண்டிய பணிகளை செய்து முடித்திட, திருப்பத்தூா் தொகுதி மேலும் வளா்ச்சியடையவும், அனைவருக்கும், அனைத்தும் கிடைத்திட உழைக்க மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றாா்.

அப்போது திமுக மாவட்ட செயலாளா் க.தேவராஜி, நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், விசிக மண்டல பொறுப்பாளா் சுபாஷ் சந்திரபோஸ், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.