லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :2 ஆகஸ்ட் 2026, 9:32 pm IST

முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகை மற்றும் முன்னாள் படை வீரா் நல நிதியின் கல்வி உதவித்தொகை பெற தகுதி இல்லாத மற்றும் நிராகரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் நவ. 30ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது.

மேலும், முன்னாள் படை வீரா் மற்றும் கைம்பெண்கள் அவா்களது சிறாா்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடப்பாண்டிலும் ஏனைய படிப்புகளுக்கு நடந்து முடிந்த கல்வி ஆண்டுக்கும் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.