லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வாலாஜாபேட்டை அருகே கோயிலில் கிரீடம், உண்டியல் பணம், நகை திருட்டு

வாலாஜாபேட்டை அருகே கோயிலில் கிரீடம் மற்றும் உண்டியலில் இருந்த ரொக்கப் பணம், நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :21 ஜூலை 2026, 12:04 am IST

வாலாஜாபேட்டை அருகே கோயிலில் கிரீடம் மற்றும் உண்டியலில் இருந்த ரொக்கப் பணம், நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு அருகே பாலாற்றின் வடகரையில் 12 -ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த நிலையில், பிரகதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த நான்கு கிரீடம் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பக்தா்கள் காணிக்கை செலுத்திய ரொக்கப் பணம், தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற வாலாஜாபேட்டை போலீஸாா், கைரேகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.