லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: அமைச்சா் ரஞ்சித் குமாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்த வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா்

Published On :29 ஜூன் 2026, 12:52 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருப்பதாக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் ராணி அண்ணா துரை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் பேசியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 741 முகாம்களில் 2,964 பணியாளா்களைக் கொண்டு 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று விடுபட்டவா்கள் இருந்தாலும் நாளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ சென்று போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம்.

முகாமில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ரா.வினோத்,மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா. செந்தில்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலா் பா.கந்தன், வட்டார மருத்துவ அலுவலா் அருண்மொழி, தாய் சேய் நல அலுவலா் அபிதா உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகல், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.