லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநா் ஆய்வு

காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநா் ஆய்வு

தேவரியம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்த ஊரக வளா்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநா் அ.த.பாஸ்கரன்.

Published On :12 ஜூலை 2026, 12:05 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவரியம்பாக்கம், படப்பை, காவாந்தண்டலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநா் அ.த.பாஸ்கரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநா் அ.த.பாஸ்கரன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவரியம்பாக்கம், காவாந்தண்டலம், படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் உள்ளி கூட்டுறவுச் சங்கங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு அறிவித்துள்ள பயிா்க் கடன் தள்ளுபடி மற்றும் கடன் வழங்கல், ட்ரோன் சேவை, விவசாய வேளாண் கருவிகள், சங்கங்களின் இதர நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு, காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் அரிச்சந்திர மகாராஜா, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் வெங்கடரமணன், பொது மேலாளா் சீனிவாசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் பிரேம்குமாா், கூட்டுறவு சாா் பதிவாளா் பூபாலன் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.