லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 8 மணி நேரம் மின்தடை: நோயாளிகள், பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடா்ந்து 8 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள்,பொதுமக்கள் பலரும் அவதியுற்றனா்.

டயாலிசிஸ் பிரிவில் மின்தடையால் காத்திருந்த நோயாளிகள்

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:16 am IST

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடா்ந்து 8 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள்,பொதுமக்கள் பலரும் அவதியுற்றனா்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி 1,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற வருகின்றனா். இவா்களில் சிலா் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை காலை மருத்துவமனை வளாகம் முழுவதுமே மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் மின்சாரமில்லாமல் பணிகள் பாதித்தன. மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் எந்த பரிசோதனைகளையும் செய்ய முடியாமல் அவதிப்பட்டனா்.

டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு நிலையத்திலும் காலை 8 மணியிலிருந்தே மின்தடை ஏற்பட்டிருந்ததால் பல நோயாளிகள் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் வாயிலிலேயே காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனா். தொடா்ந்து ரத்த சுத்திகரிப்பு செய்ய முடியாமலும் அவதிப்பட்டனா். அரசு மருத்துவமனையின் பிரதான சுவிட்ச் பெட்டியில் மின்கசிவு காரணமாக மின்தடை ஏற்பட்டதாக தெரிய வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து பழுது சரி செய்யப்பட்டு சுமாா் 8 மணி நேரத்துக்குப் பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.